சனி, 23 ஆகஸ்ட், 2014

அன்பே ... அன்பே...



மெல்லச் சொட்டும் 
மழைத்துளியை 
கையில் ஏந்தி ,
பொத்திக் கொள்வேன் ....
அதை 
என் முத்தம் தேடும் ,
உன் தேகக்கீற்றில் 
உரசச் செய்வேன் .....

மிதந்து செல்லும் 
மேகம் திரட்டி ,
மேனியெங்கும் 
உருட்டி விடுவேன் .....

என் வெட்கமெல்லாம் 
மூட்டைகட்டி 
ஆற்றில் விடுவேன் ....
அதை 
அப்பப்போ அள்ளிப்பருகி ,
கன்னம் சிவப்பேன் ....

உன் பெயரைச்சுமந்த 
கவிதைகளை 
காற்றில் ,
பறக்கச் செய்வேன் ....
அதை 
சுவாசித்து சுவாசித்தே 
மூச்சடைத்துப்போவேன் ...

அன்பே ,
உனக்கே உனக்காய் 
சேர்த்து வைத்த 
ஆசையெல்லாம் ,
கருகிப் போனதே ....
என் 
காதல் கீதம் 
ஏனோ இன்று 
சோக கீதம் ஆனதே ...
கலைந்து போனதே ....
கனவாய் ஆனதே....
அன்பே ...
மீண்டும் வா ....
என்னை மீட்க வா ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...