வெள்ளி, 17 ஜனவரி, 2014

எங்களின் (பெண்களின் ) நட்பு

அன்றொருநாள்
அவளைக்
கண்டேன் ...

பள்ளிகூட
தோழியவள்...
பாசமிகு
பாவையவள் ...

கண்ட நொடி
கண்களில்
மிளிர்ந்தன
மின்னல்கள் ....

சிலநொடி
சிரிப்புகள் ...
பலநொடி
ஏக்கங்கள் ...

கலைந்து விட்ட
கனவுகள் ..

கிழிந்து விட்ட
கடிதங்கள் ...

மறந்து விட்ட
நினைவுகள் ...

மீண்டும்
முளைத்தன ...
முன்னே வந்து
சிரித்தன ...

அடடா ...
அதெல்லாம்
சில நொடி !
அழைப்புமணி
ஒலித்து
அலைபேசி அழைக்க ...

அச்சச்சோ !
நேரமாச்சு...
பதைத்தன கொஞ்சம்  ..
துடித்தது நெஞ்சம் ...

கடைசியில் கடக்கையில் ,
திரும்பினோம்
இருவரும் ...
கண்ணீரில் கனத்த
கண்களுடன் ...

பெண்களின் நட்பில்
பரிதாபம்தான்
என்றும்
மிச்சம் ...


1 கருத்து:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...