வியாழன், 30 ஜனவரி, 2014

எனது மகளின் முதல் கவிதை எனக்காக ...

2 ஆவது படிக்கும் எனது மகள் சோனா,சில காரணங்களுக்காக  என் அம்மா வீட்டில் தங்கிய போது ,அவள் எனக்காக எழுதிய கவிதை ...நிறைய தவறுகள் செய்து அவள் எழுதிய போதும் ,அவள் அன்பை கண்டு சிலிர்த்தேன் .. இதோ உங்களுக்காக அந்த கவிதை கீழே  ..


நீ என் அம்மா 

என் அம்மா நீ என் செல்ல அம்மா 
நீ என்னை வளர்த்த நல்ல அம்மா 
ஒவ்வொரு நாளும் அன்பு காட்டிய வெல்ல அம்மா ...
என்னை நாளும் வளர்த்த அன்பு அம்மா 
நீ சிரிக்கும் போதெல்லாம் எனக்கு பார்த்துக்கொண்டே இருக்கணும்போல இருக்கிறது ...
அம்மா என்றால் தாய் ..என் அம்மா நீ..
 ஒவ்வொரு நாளும் உன்னை பார்க்காமல் இருக்க முடியாது ...
நான் உன்னிடம் போன் அல்லது லேண்ட் லைனில் பேசிக்கொண்டே இருக்கிறேன் ..

இப்படிக்கு 
s.சோனா 



8 கருத்துகள்:

  1. சூப்பர், சூப்பர்,செல்ல,நல்ல,வெல்ல வார்த்தை பிரயோகம் சூப்பர். உணர்வுகள் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.நல்வாழ்த்துக்கள் சோனா.

    பதிலளிநீக்கு
  2. அருமை... அருமை... s.சோனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்..,.

    பதிலளிநீக்கு
  3. மிகமிக அழகான கவிதை. அதில் அவளின் அன்பு,பாசம் தெரிகிறது. வாழ்த்துக்கள் சோனா.

    பதிலளிநீக்கு
  4. சோனா தன் உணர்வுகளை அழகா வெளிபடுத்திய கவிதையை பாரட்ட வார்த்தையில்லை..வாழ்த்துக்கள் செல்லம்!!

    பதிலளிநீக்கு
  5. asiya அக்கா நுணுக்கமா கவனித்து சொல்லி இருக்கீங்க .. ரொம்ப நன்றி ..
    திண்டுக்கல் தனபாலன் சார் ரொம்ப நன்றி ..
    ப்ரியசகி , உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ...
    மேனகா கருத்துக்களை சொல்லி ,வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ..
    ரொம்ப நன்றி மேனகா .. நான் word verification வந்து இருப்பதை கவனிக்கவே இல்லை ..
    எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ...

    பதிலளிநீக்கு
  6. Super Sangeetha, I totally amazed with the way Sona has put up her thoughts and feelings. She will be a very good poet just like you. Lovely lovely lovely... my sweet hugs and kisses to Sona...

    பதிலளிநீக்கு
  7. priya thank you so much for ur wonderful comment and hugs,kisses... feel good for her.. thanks

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...