சனி, 1 பிப்ரவரி, 2014

அவல் உப்புமா (poha upma)

பொதுவாக எனக்கு சுலபமான சமையலில் விருப்பம் அதிகம் .காலைல அவசரமா ஸ்கூல் , அனுப்பனும்னு அன்னைக்கு எனது தேர்வு அவல் உப்புமாவா தான் இருக்கும் .. இது மிகவும் சத்தானதும் கூட .. இதை ஒரு முறை சுவைத்தால் நிச்சயம் உங்கள் விருப்ப பட்டியலில் அவல் உப்புமா சேர்ந்துவிடும் .. 


தேவையான பொருட்கள் :

கெட்டி அவல் - 1 கப் 
பல்லாரி - 1 
கடுகு - 1 ஸ்பூன் 
உளுந்தம்பருப்பு - 1  ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய்- 1 
கருவேப்பிலை - 1 கொத்து 
உப்பு - தேவையான அளவு 
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 

செய்முறை :

  • முதலில் கெட்டி அவலை மூன்று ,நான்கு முறை நன்கு அலசிக்கொள்ளவும் .(அலசும் போதே பாதி ஊறிவிடும் )
  • பிறகு அதை முக்கால் கப் தண்ணீர் ,உப்பு சேர்த்து ஊறவிடவும் .
  • அதற்குள் ,வாணலில் எண்ணெய் விட்டு , கடுகு ,காய்ந்த மிளகாய் ,உளுந்தம்பருப்பு ,சீரகம் , கருவேப்பிலை,மஞ்சள்தூள் , சேர்த்து கிளறவும் .
  • பிறகு அதனுடன் பல்லாரி,ஒரு சிட்டிகைஉப்பு  (ஏற்கனவே ஊறவைத்த அவலில் சேர்த்து இருப்பதால் ) சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் .
  • பின்  ஊறிய அவலை எடுத்து ,நன்கு உதிர்த்து விடவும் .(தண்ணீர் இல்லாமல் உதிர் உதிரியாக இருக்க வேண்டும் .)
  • அதை வாணலில் கொட்டி கிளறவும் கடைசியாக , எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும் . இது மிகவும் ரம்யமான  சுவையை தரும் .
  • அவ்வளவுதான் அவல் உப்புமா தயார் .
  • விருப்பப்பட்டால் , வறுத்த நிலக்கடலை கூட தாளிக்கும் போது சேர்த்து கொள்ளலாம் .
  • குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும் . 

   




3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...