வியாழன், 23 ஜனவரி, 2014

நானும் ,எனது பேனாக்களும் ....

முன்பெல்லாம், பேனாக்கள் என்
கையில் கிடைக்கும்போது
அது அங்கங்கு என் பெயரை எழுதி
தன் அடையாளத்தை
விட்டுச் செல்லும் .....

இப்போதெல்லாம், பேனாக்கள்
மளிகை சாமான்களும்,
அப்பப்போ சில கவிதைகளும்,
எழுதி தன் பரிணாமத்தை
விளக்கிச் செல்கின்றன ...

ஆம்...
பேனாவைப்போல்
என் பெயரும், அந்த
பழைய புத்தகங்களில் ,
சப்தமில்லாமல்
சிதறிக் கிடக்கின்றன ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Enjoy this page? Like us on Facebook!)