ஞாயிறு, 29 நவம்பர், 2015

மீண்டும் வேண்டும் நீ ....


தொலைந்து போன கனவுகள் தேடிப் 
பறக்கும் பட்டாம்பூச்சியைப் போல ,
உன் நினைவுகள் தேடிப் பறப்பேன் 
வானமெங்கும் !!!

என் குறைகளெல்லாம் முதலாய் வந்து ,
எடுத்துச் சொல்ல 
எனக்குமீண்டும் வேண்டும் 
நீ !!!


எங்கோ ஒலிக்கும் பாடல் தேடி ,
என் செவியை நிறைக்க 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!!

துயிலுறங்கும் நேரம் கூட,
என் துயரம் துடைக்க 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!

நடந்ததெல்லாம் கனவாய்ப்
போக !
நினைவுகள் மட்டும் நிஜமாய் ஆக 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!

 இவ்வரிகள் எழுதும் இந்த வேளை ,
என் கண்ணில் முட்டும் 
கண்ணீர் துடைக்க 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!


எதிலெதிலோ நினைவாய் வந்தாய் நீ !
என்றென்றும் நிஜமாய் 
எனக்கு மீண்டும் வேண்டும் 
நீ !!!!

வருவாயா ? கரம் தருவாயா ?
என் எதிர்பார்த்து ஏங்கும் ,
எனக்கு மீண்டும் வேண்டும் நீ !!!!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...