செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

தோழிக்கு ஒரு பிறந்த நாள் பரிசு....


பிப்ரவரி தந்த
பெண்ணிலவு
இவள் .....

என் உணர்வுகள் 
பகிர வந்த ,
பேசும் டைரி 
இவள் ....

என்னைத் தன்
பாதியாக எண்ணும்
பாசப் பறவை
இவள் ....

நிலவொளியில் 
தவழும் நதிநீர் 
இவள் ....

என்னைச் சிரிக்க 
வைக்கும் 
செந்தாமரை 
இவள் ....

நினைத்தால் இனிப்பாள் ...
நிஜத்தில் வருவாள் ...
பேசாத வார்த்தைகள் 
புரிந்து செயலால் 
சிலிர்க்கச் செய்வாள் ....

உன் பிறந்த நாள் 
பரிசாக ,என்னிடம் 
உனக்கான இந்த 
கவிதையும் ,
என் ஆயிரம் முத்தங்களும் .....




1 கருத்து:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...