வெள்ளி, 31 அக்டோபர், 2014

மணப்பெண்ணின் சொல்ல இயலா சோகங்கள் ...




அறையில் சிதறிய புத்தகங்களும் ,
அம்மாவின் அர்ச்சனைகளும் ,

அதுவரை செல்லாத  சமையலறையும் ,
அம்மாவின் கைப்பக்குவமும் ,


வீதிமுனைப் பிள்ளையாரின்
பிரார்த்தனை பெட்டிஷன்களும்,


பரிசாய்ப் பெற்ற பதக்கங்களும் ,
பால்கனிப் பூக்களும் ,

செல்ல நாயின் சிணுங்கள்களும் ,
சிறுவயது கிறுக்கல்கள் சுமந்த சுவர்களும் ,

எல்லாம் சேர்ந்து  ,
இதயம் பிளந்து ,
கண்ணீர்  உதிர்த்து ,
பாரம் சுமந்து ,

புன்னகை போர்த்தி
புகுந்த வீடு
நுழைகிறாள்
புதுப்பெண்ணாக  ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...