மிகவும் எளிதான சுவையானது இந்த குழம்பு . உடலுக்கு மிகவும் ஏற்றது . சளி இருமலுக்கு மிகவும் நல்லது .....
தேவையான பொருட்கள் :
கருவேப்பிலை - 3/4 கப்
பூண்டு - 10 பல்
புளி- நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைக்க :
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
மல்லி - 1/ 4 ஸ்பூன்
க.பருப்பு - 1ஸ்பூன்
உ.பருப்பு - 1 ஸ்பூன்
தாளிக்க :
கடுகு -1 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
உ . பருப்பு - 1/2 ஸ்பூன்
ந.எண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
- முதலில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து அதனுடன் கருவேப்பிலை சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .
- பூண்டு , கருவேப்பிலையை சுத்தம் செய்து வைக்கவும் .
- பின் கடாயில் எண்ணெய் விட்டு ,அதில் கடுகு ,உ.பருப்பு , வெந்தயம் சேர்த்து தாளித்து ,பூண்டையும் சேர்த்து வதக்கவும் .
- பின் இதனுடன் புளி கரைசல், அரைத்த விழுது சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவும் ..
- மணமணக்க கருவேப்பிலை குழம்பு தயார் ... சூடான சாதத்துடன் பரிமாறவும் .