வியாழன், 9 அக்டோபர், 2014

நண்டு கிரேவி /crab gravy /nandu gravy


மிகவும் சுவையான நண்டு கிரேவி செய்யும் போது ,இதை சுத்தம் செய்த உடனே ,தேங்காய் பாலில் போட்டால் இதன் சத்துக்கள் வீணாகாது .

தேவையான பொருட்கள் :

நண்டு - 1 கி 
தேங்காய் - 1 மூடி (பெரியது )
இஞ்சி - 1 துண்டு 
பூண்டு -20 பல் 
பெரிய வெங்காயம் - 2 
பச்சைமிளகாய் - 1 
தக்காளி - 2 
சோம்பு - 2 ஸ்பூன் 
மிளகு - 3 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
மல்லித்தூள் - 1 ஸ்பூன் 
கருவேப்பிலை - 2 கொத்து 
மல்லித்தழை - சிறிது 

செய்முறை :


  • சோம்பு பொடித்து வைக்கவும் 
  •  பின் மிளகை  வெற்று வாணலில் மணம் வருமாறு வறுத்து பொடி செய்து தனியே வைக்கவும் .
  • இஞ்சி ,பூண்டு விழுது தயார் செய்து வைக்கவும் .
  • தேங்காய் பால் தயாரித்து வைக்கவும் (வடிக்கட்ட வேண்டாம் )
  • பெரிய வெங்காயம் ,தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும் .
  • தேங்காய் பாலில் ,மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,இவற்றை போடவும் .அதில் சுத்தம் செய்த உடனே நண்டையும் இந்த கலவையில் போட்டு வைக்கவும் .
  • பெரிய பாத்திரத்தில் (நண்டு வேக தேவையான பாத்திரம் )எண்ணெய் விட்டு ,அதில்  சோம்புத்தூள் ,பெரிய வெங்காயம் ,கருவேப்பிலை , பச்சைமிளகாய் ,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும் . பின் அதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் நண்டு மசாலாவையும் சேர்த்து ,கிளறி உப்பு,கரம்மசாலாத்தூள்  சேர்த்துகிட்டத்தட்ட 45  நிமிடங்கள் வேகவிடவும்  
  • கிரேவி பதம் வந்தவுடன் இறக்கி பரிமாறலாம் .


2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...