ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

உனக்கு நிகர்....


உன்னை மழை துளியோடு
ஒப்பிட மனமில்லை....
ஏனென்றால், மழை துளியும்
மண்ணோடு கரைந்து போகும்....

உன்னை வான்மதியோடு
ஒப்பிட எண்ண்மில்லை....
நாளாக நாளாக அதுவும்
தேய்ந்து போகும்....

வானத்து மேகங்களுடன்
ஒப்பிடவும்  எண்ணமில்லை....
ஏனென்றால் கூட்டத்தோடு கூட்டமாக
அதுவும் கலைந்து போகும்....

உன்னை ஒப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை...
உன்னை ஒப்பிடுகிறேன் உன்னோடு....
ஏனென்றால் உனக்கு நிகர்
நீயே.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...