தொலைந்துபோன சிறகுகள் தேடி
அலையும் சிட்டுக்குருவி நான் !...
முடியப்போகும் இருள்விளக்கின்
விட்டில் பூச்சி நான் !.....
அர்த்தங்கள் இல்லா,
அட்டைக்குள் புதைந்த ,
அகராதியாய் நான் !....
நிமிடங்கள் நகரா
கடிகாரம் நான் !....
வர்ணங்கள் இல்லா
வானவில் நான் !...
தென்றலை மறந்த
ஜன்னல்கள் நான் !...
விடைகள் இல்லா
விடுகதை நான் !....
முடிவே இல்லா கதையாய் நான் !...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....