ஞாயிறு, 25 ஜனவரி, 2015

உன் மௌனம்....


என் கவலை 
மறைக்க ,
உன் நினைவுகளை 
பொறுக்கி ,
சாயம் பூசுகிறேன் .....

குழப்பங்களின் 
குவியல் மீது 
வாடும் குருவிக்கூட்டின் 
முட்டை போல ,
தினம் தினம் 
உடைந்து போகிறேன் ....

தாயின் கோபம் கண்டு ,
தாயையே கட்டி அழும் ,
மழலை போல 
உன்னையே எண்ணி ,
அழுகிறேன் .....

உன் மௌனம் போல 
என்னைக் கொல்லும் 
ஆயுதம்  வேறில்லை ......

கரம் தந்து 
காக்க கூட 
வேண்டாம் .....
கருணைப் பார்வை 
ஒன்றை வீசிவிடு .....
போதுமெனக்கு 
பொறுமை காப்பேன் .......

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...