செவ்வாய், 15 அக்டோபர், 2013

கவிதை குழந்தை நதிஷ்.....


சின்ன சின்ன
தொட்டில் கட்டி,
சிங்காரம்
பண்ணி வெச்சேன்!

முத்துமணி ரத்தினமே
உனக்காக
காத்திருந்தேன்!

புதுசாப்பூத்த
பூவப்போல,
பூவுலகில் நீயும்
வந்தாய் !

தென்றலுக்கு
சேதி சொல்லி
விளையாட்டு காட்டச்
சொன்னேன் !

உன்னோடு
சேர்ந்திருக்க
உமையாளை
வேண்டிக்கிட்டேன்!

நாள் தோறும்
நீ் வளர
நயமாக
பார்த்துக்கொள்வேன்....

நதியை போல
நன்மை செய்ய
நதிஷ் -ன்னு பேரு
வெச்சேன் ...

நாலு திசை
போற்றிடவே
நீ
வாழு
செல்ல கண்ணே ...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...