என் வீட்டுத்
தோட்டமெல்லாம்
ரோஜாக்கள் .....
நீ
விரும்பி
சூடுவதால் ....
என் வீட்டுச்
சுவரெல்லாம்
ஓவியங்கள் ...
நீ
ரசிப்பாய்
என் அலமாரியெல்லாம்
புடவைகள்
நீ
விரும்பி
அணிவாய்
என்பதால் ....
என் அறையெல்லாம்
புத்தகங்கள்
நீ ரசித்து
படிப்பாய்
என்பதால் ....
என் இதயமெல்லாம்
காயங்கள்
நீ
நேசிப்பது
வேறொருவரை
என்பதால் .....
thanks to :
http://www.arusuvai.com/tamil/node/25214
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....