சனி, 9 ஜூலை, 2011

எப்படி சொல்வேன்....


எப்படி சொல்வேன்
நீயில்லா நிமிடங்களை......
உன்னுடன் வாழ்ந்த
தருணங்களை.....
அவ்வப்போது சொல்லும்
அழகான பொய்களை ,
இதழோரம் பூக்கும்
புன்னகையுடன்
கேட்டுச்சிரிக்கும்
அந்த புன்னகையை.....
தாமதமாய் வந்த போது
கோபத்தை கண்ணில் கலந்து,
மௌனத்தால் ,
தண்டிக்கும் அந்த
தருணங்களை...
சின்ன சின்ன சண்டையிட்டு
பொய்க்கோபம் கொண்டு ,
என் தவிப்பை கண்டு,
உள்ளூர சிரிக்கும்
உன் உதடுகளை....
காதலில் கனிந்து நீ
செய்த குறும்பு தனங்களில்
நான் படும் அவஸ்தையை,
ரசித்து சிரித்த உன்
கண்களினை ....
கவலையில் மனம் வாடியபோது
கண்ணில் கருணை
கொண்டு, நான் சாய
தோள் கொடுத்த அந்த
மென்மையினை...
இழந்து தவிக்கிறேன் ..
நீ இல்லாமல் தவிக்கிறேன்..
முகம் காண துடிக்கிறேன்...
காதலில் கசங்கிய என்
இதய வலியை...
எப்படி சொல்வேன்?...
சூழ்நிலை கைதியாகி,
என்னை மட்டும் தவிக்கவிட்டு,
இதயம் பிடுங்கி சென்றாய் ,
எங்கோ ஒளிந்து கொண்டாய்.,
எப்படி சொல்வேன்
நீயில்லா நிமிடங்களை ......
உன்னுடன் வாழ்ந்த
தருணங்களை.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...