வெள்ளி, 9 மார்ச், 2012

கவிதை கிறுக்க.....


அந்தி வண்ண மாலையொன்றில்,
கையில் கிடைத்த பேனாவுடன்
அமர்ந்து கொண்டேன்
கவிதை கிறுக்க.....
ஆர்வமுடன் ஓடி வந்து
அன்னை மடி
சாய்ந்துகொண்டாள்
அன்பு மகள்!
வார்த்தைகளை
கோர்த்துக் கோர்த்து,
சோர்ந்து போன
என்னைத்
தொட்டு
ஏதும் புரியாமல்
முத்தமிட்டாள்
வாஞ்சையோடு.......
சிட்டு குருவி
சிறகை போல
மடியிலிட்டு
அணைத்துக்
கொண்டேன்
என் மகளை......
காகங்களும், குருவிகளும்
கானம் பாட
இதமாய் இனித்தது
அம்மாலைப்பொழுது.....
கவிதை கிறுக்க
விரைந்து வந்த
என் விரல்கள்
இறுதியில்
கிறுக்கிய கவிதை
இதோ
உங்கள் கையில்.........
- சங்கீதா செந்தில்
நன்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...