வெள்ளி, 9 மார்ச், 2012

காதல், மௌனத்திலும் அழகுதான்......


சாலையோரம்
நடக்கையில்,
அனிச்சையாய்
திரும்புது
விழிகள்.......
உன் பக்கம்......
விழிகளிரண்டும்
பார்க்கையில்,
விலகாமல்
தவிக்குது
என் நெஞ்சம்.......
அக்கம் பக்கம்
பார்ப்பது போல்,
அடிக்கடி பார்க்கிறேன்....
உன் முகத்தை......
உதட்டோரம் தவழும்
உன் புன்னகை
கண்டு,
மனமெல்லாம்
மத்தாப்பூ
சிதறி தெறிக்கும்.....
ஒரு நொடி
சந்திப்பை
ஓராயிரம் முறை
எண்ணி
மனதில் பூத்துச்
சிரிப்பேன்.....
சிரிக்காமல் விட்ட
சந்திப்புகளில்
தனித்தீவாய்
மனம் வாடும்.....
அருகருகே
முகம் பார்த்தால்
அச்சமொன்று
இதயமெல்லாம்
பரவிச்செல்லும்...
அவ்வப்போது,
நீ பார்க்காது
போனால்,
மனதில்
ஆயிரமாயிரம்
ரயில்கள் ஓடும்.....
விழிகள் மட்டும்
பேசிக்கொள்ள,
விடையின்றி
வாடுது
என் நாட்கள்.....
வார்த்தைகள் விலகலாம்
ஆனாலும்,
என் காதல்,
மௌனத்திலும்
அழகுதான்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...