வியாழன், 13 மார்ச், 2025

ஏக்கம் கவிதை

 


ஏக்கங்களுக்கு 

எப்போதும் 

என் மீதான 

பிரியங்கள்  

அதிகம்… 

விருப்பப்பட்டியலில் நிறைந்து கிடக்கும், கனவுகளை ,

ஒரு வெற்றுப்பார்வை மட்டும் வீசி ,

மனத்திரையில் மட்டும் கண்டு,  ஏக்கங்களோடு கடந்துபோகும் 

மன நிலையை மறைக்க இரும்புத்திரை கொண்டு  தினம்தினம்  நடத்தும் போராட்டங்களை  என்னவென்று சொல்ல…

கனவுகள் கரங்களில் கிடைக்கும் காலம் வரை காத்திருக்கும் இந்த கனவுக்கண்கள்…



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Enjoy this page? Like us on Facebook!)