திங்கள், 10 மார்ச், 2025

தனிமையும் நானும்..



இந்த விரல்களுக்கிடையே ஒரு 

கவிதை ஒன்று கசங்கிக்கிடக்கிறது.. 


அதை வெளிப்படுத்த தினமும் திணறிக்கொண்டிருக்கிறது…


அது தன் எண்ணங்களை 

எல்லாம் கோலங்களாய் 

வடித்துக்கொண்டிருக்கிறது…


அவ்வப்போது , மேகவெளியில் 

மிதந்து நட்சத்திரங்களோடு 

கதைபேசிக்கொண்டிருக்கும்… 


தன்னைத்தானே தனிமை வயப்படுத்தி, ஆற்றாமையில் அவ்வப்போது அழுது கொண்டிருக்கும்…

தனக்கான தேடலை தொடர்ந்தபடியே… 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...