வியாழன், 7 ஜனவரி, 2016

உன்னால் முடியும் அன்பே!!!

ஒற்றைச் சொல் பேசி , உயிர்க்கிழிக்க உன்னால் முடியும் அன்பே !!!

உன் மீதான என் எண்ணங்களை , 
அரை நொடியில் அறுத்தெடுக்க 
உன்னால் முடியும் அன்பே!!!!

உன் கோபத்தீயில் கருகிச் சாக ,
கண்ணீருடன் காத்திருப்பேன் அன்பே!!!

கிழிந்த இதயம் கொண்டு ,
கிழவியாகும் வரை 
காத்திருப்பேன் அன்பே...

அன்பு செய்யும் நேரம் ,
அடடா ! இவன் போல யாருமுண்டோ
என எண்ண வைப்பாய் !!

கோபம் கொள்ளும் அந்நேரம் ,
ஆயிரம் சூரியனாய் சுட்டெரிப்பாய் !

போதுமிது ! போதுமிது !! என்னவனே !!!!
உன் கோபத்தீயை என் கண்ணீர்க்கடல் 
அணைத்திடுமோ?
அல்லது
என் கண்ணீரும் உன் முன்னே பயந்து 
கரைந்திடுமோ? 
விடை சொல் 
என்னுயிரே....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...