சனி, 30 ஜூன், 2012

கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்


கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்
எப்போதடா
எனக்கு
உறவனாய்
நீ...?
எப்போது
உன் நினைவுகளால்
தினம்
என்னை
சுட்டுப்பொசுக்கும்
சூரியனானாய்
நீ....?
எப்போது
என் வெட்கம்
உண்ணும்
உயிரானாய்
நீ ....?
எப்போது
என் கனவோடு
கைகோர்க்கும்
காதலனாய்
நீ ...?
கண்டுக்கொண்டேன் ....
கண்டுக்கொண்டேன்....
உன்
ஒரு நொடி
பார்வையில்
உயிர் சாய்க்கும்
மின்னலனாய்
சிரித்தாயே
அப்போதே
என் வசம்
இழந்த
தருணமதை
கண்டுக்கொண்டேன்....
கண்டுக்கொண்டேன்......
- சங்கீதா செந்தில்
நன்றி http://www.arusuvai.com/tamil/node/23110

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...