சனி, 26 மே, 2012

என்னவனே...


என்னவனே....
என்
வழிப்பாதைகெல்லாம்
உன்
விழிப்பூக்களால்
விளக்கேற்றியவனே....
என் முகம்
பார்க்கும்
கண்ணாடிமுன்
முத்துப்பல் தெரிய
விரித்துச் சிரிப்பவனே...
உன் ஒரு
நொடிப்பார்வைக்கென
நெடுந்தூரம்
பிரயாணிக்கிறேன்
என்
இதய வானில்...
உன் அன்பில்
சிறுகுறை
கண்டு
கோபிக்கிறேன்
ஆனாலும்
உனக்காகவே
சுவாசிக்கிறேன்...
வழியெல்லாம்
விளக்கேற்றி
வெளிச்சம் தந்தவனே ..
என் விழியோடு
விலகாத
நேசம் தருவாயா?...
- சங்கீதா செந்தில்
நன்றி :http://www.arusuvai.com/tamil/node/22789

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...