தந்தூரி சாப்பிட ஹோட்டல் போக வேண்டிய அவசியம் இல்லை ..மிகவும் சுலபமான முறையில் சுவையா தயாரிக்கலாம் வாங்க ..
தேவையான பொருட்கள் :
சிக்கன் துண்டுகள் - 8 -10 (leg piece also)
தயிர் - 1கப்
வெண்ணெய் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
சிவப்பு கலர் பவுடர் - சிறிது
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய்- தேவைக்கு
அடுப்பு கரி - 2 அல்லது 3 துண்டுகள்
அலங்கரிக்க :
வெங்காயம் - நறுக்கியது
மல்லி தழை - சிறிது
எலுமிச்சை - 2 துண்டுகள்
செய்முறை :
- சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து ஆழமாக கீறி வைக்கவும் .
- அதனுடன் தயிர், இஞ்சி பூண்டு விழுது ,சிவப்பு கலர் பவுடர் ,உப்பு ,மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு பிரட்டி ஊறவிடவும்
- இதை அப்படியே 1 மணி நேரம் வைக்கவும் .
- ஒரு நான்ஸ்டிக் பான் வைத்து அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும் .
- அதில் சிக்கன் துண்டுகளை இட்டு,இருபுறமும் திருப்பி 10 - 12 நிமிடங்கள் நன்கு அடர் பொன் நிறமாகும் வரை வைக்கவும் .
- அங்காங்கே கருப்பாக வரும்வரை வைக்கவும்
- அடுப்புக்கரி துண்டுகளை காஸ் அடுப்பின் flame ல் வைத்து ,நன்கு சிவப்பாகும் வரை நெருப்பிலே வைக்கவும்
- ஒரு பாத்திரத்தில் சமைத்த சிக்கன் துண்டுகளை வைத்து , ஒரு சிறு கிண்ணத்தில் நெருப்பில் வைத்த அடுப்புக்கரியை வைத்து ,அந்த கிண்ணத்தில் உள்ள கரியில் சில துளிகள் எண்ணெய் விடவும் .
- அதிலிருந்து இப்போது புகை வெளிவரும் உடனே அந்த பாத்திரத்தை மூடி விடவும்
- அந்த புகை சிக்கன் துண்டுகளுடன் பாத்திரம் முழுதும் இருக்கும் .
- 1 நிமிடம் இப்படியே விட்டு பாத்திரத்தை திறந்து சிக்கன் துண்டுகளை வெளியே எடுக்கவும் .
- இதனுடன் வெங்காயம் ,எலுமிச்சை ,மல்லித்தழை வைத்து பரிமாறவும்
- நிச்சயம் சுவையாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....