வியாழன், 4 செப்டம்பர், 2014

ஊத்தப்பம் /oothappam


இட்லி ,தோசை போர் அடித்துவிட்டால் அவ்வப்போது ஊத்தப்பமும் செய்யலாம் . ஒரே வகை சமையலில் இருந்து சிறு மாறுதல் கிடைக்கும் .சுவையும் அருமையாக இருக்கும் 

தேவையான பொருட்கள் :

தோசை மாவு - தேவைக்கு 
பொடியாக நறுக்கிய - வெங்காயம் ,குடைமிளகாய்
கேரட்,பனீர்  - துருவியது (சிறிது )
இட்லி மிளகாய் பொடி - சிறிது .

செய்முறை :

  • வெங்காயம் ,காய்களை எல்லாம் கலந்து தனியே வைக்கவும் .     
  • வழக்கமாக தோசை வார்ப்பதை விட மிக சிறிது கெட்டியாக ஊற்றிக்கொள்ளவும் .

  • அதில் லேசாக துளைகள் வர ஆரம்பித்த உடனே ,கலந்து வைத்த கலவையை மேலே தூவவும் .
  • அதனுடன் பனீரும் ,இட்லி மிளகாய் பொடியும் தூவி விடவும் .
  • சுற்றிலும் எண்ணெய் விட்டு ,திருப்பி போட்டு எடுக்கவும் .
  • சுவையான ஊத்தப்பம் தயார் .
  • இதில்  தக்காளி ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,மல்லிதழை இவற்றையும் பொடியாக நறுக்கி சேர்க்கலாம் .சுவையாக இருக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...